Wednesday, February 18, 2009

காதல் தினம். 14 -2-11


காதல் தினம். 14 -2-11

என்உயிராணவனே!
என் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே
என்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.

அந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்
அலை அலையாய் கரைசேர..
வெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட
இரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய
பரந்த வெளியில் கால்கள் நடமிட
பூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்
உன்முகம் தெரிந்தது.

திகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி
மீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.
உனது விழியும் எனது விழியும்
பார்வையிடும் நொடிப்பொழுதில்!!!!
நீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...
கரைந்து கொண்டோம்.
அந்தநொடிப்பொழுதில் உன்னையும் என்னையும்...
அறியாது நமக்குள்ளே காதல்..உருவானது.

மொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட
ஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.
நீபாதி நான்பாதியாக!
சொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள!
இருவிழியும் உற்று நோக்கையில்..
மனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்!!

காதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்
நினைத்துபார்க்கும் பொழுது மழையே..
இல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..
என் இதயம் பிளக்க கண்டேன்!!!!!

ரசித்துவாழ காதல் வேண்டும்
இணைந்து வாழ...நீ வேண்டும்...
என்பதால்
உன்னை கைபற்றிக்கொண்டேன்..
இன்றுபோல்..என்றும் உன்னோடு
இனைந்திருப்பேன்.

No comments:

Post a Comment